Thursday, March 10, 2016

ஸ்டாலின்: நாளை எனும் பெருங்கனவு


எந்தக் கட்சிக்கும் இல்லாத விசித்திரமான நிலை தி.மு..வுக்கு இருக்கிறது. தேர்தலை ஒட்டி எழுதப்படும் கட்டுரைகள், எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் அடையாளமாக ஒரு முகம் இருக்கும். தி.மு..வுக்கு மட்டும் இரண்டு முகங்கள். தி.மு.. தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு..ஸ்டாலின் ஆகிய இரு முகங்களும் தி.மு..வின் அடையாளமாக இருக்கின்றன. பல்வேறு தலைவர்கள், ஆளுமைகள் கொண்ட கட்சியில் இது தவிர்க்க முடியாததுதான். ஒரு காலத்தில் பா...வைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடல் பிஹாரி வாஜ்பாயி, லால்கிருஷ்ண அத்வானி ஆகிய இருவரும் இணையாகக் குறிப்பிடப்படுவார்கள். அதுபோலத்தான் இதுவும் என்று கடந்துவிட முடியாது. ஏனென்றால், மோடி யுகம் தொடங்கும்வரை பா... கூட்டுத் தலைமையை முன்னிறுத்தியது. தி.மு.. விஷயத்தில் இப்படி இருவரையும் முன்னிறுத்துவது ஊடகங்களும் கருத்துரையாளர்களும்தானே தவிர, கட்சி அல்ல. இருவரில் யார் சிறந்த முதல்வராக இருப்பார் என்றக் கேள்வி எழுப்பப்படுவது கட்சியின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது சகிக்க முடியாத அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.

தந்தையையும் மகனையும் ஒருவருக்கொருவர் எதிரெதிராக நிறுத்தும் இந்த வேலையை ஊடகங்கள் ஏதோ ஒரு வகையில் செய்துவருகின்றன. தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எந்தச் சமயத்திலும் தி.மு..வையும் அதன் தலைமையையும் சங்கடப்படுத்தக்கூடிய விஷயம் இது. ஆனால், இவர்கள் தந்தை - மகனாக இருபப்தால்தான் இப்படிப் பேசவும் முடிகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். கருணாநிதியாகவும் ஸ்டாலினாகவும் இல்லாமல் வேறு எந்த இருவரை வைத்து இப்படிப் பேசப்பட்டாலும் கட்சி பிளவுபட்டிருக்கும். ராஜாஜி - காமராஜர், கருணாநிதி - எம்.ஜி.ஆர்., கருணாநிதி - வைகோ எனப் பல்வேறு ஆளுமை மோதல்களும் கடைசியில் பிளவில்தான் முடிந்தது. ஆனால், கருணாநிதி - ஸ்டாலின் விஷயம ஆளுமை மோதல் அல்ல. எனவே இது பிளவுக்கு வித்திடாது. ஆனால் இதன் பாதிப்பு கட்சிக்கு இருக்கும். உறுதியான ஒற்றைத் தலைமையை .தி.மு.. முன்னிறுத்தும்போது அப்படிச் செய்ய இயலாத நிலையில் தி.மு.. இருப்பதாகவே மக்கள் மனதில் இது பதிவாகும். அதே சமயத்தில், தி.மு.. ஒருவரை மட்டுமே நம்பி நடக்கும் கட்சி அல்ல என்னும் எண்ணத்தையும் இது உருவாக்கக்கூடும்.

விளைவுகள் ஒருபுறம் இருக்க, இந்த நிலை உருவானதில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. “வாரிசை நியமிக்க இது ஒன்றும் சங்கர மடம் அல்லஎன தி.மு.. தலைவர் திரும்பத் திரும்பச் சொன்னாலும் அவர் ஸ்டாலினுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வெளிப்படையானது. கட்சியில் வலுவான பல ஆளுமைகள் - கருணாநிதியின் சமகாலத்தவர்களும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் - இருந்தபோதிலும் கட்சிக்குள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஸ்டாலின் முன்னேறியதற்குக் காரணம் அவரது திறமை மட்டும்தான் என்று சொன்னால் தீவிர தி.மு.. ஆதரவாளர்களேகூட அதை ஏற்க மாட்டார்கள். ஸ்டாலின் இந்த இடத்தைப் பெறுவதற்குக் கட்சித் தலைமையின் ஆதரவும் ஊக்கமும் இருந்திருக்கிறது என்பதும், தலைவரின் மகன் என்பதால் தொண்டர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது என்பதும் மறுக்க முடியாதவை. வாரிசை அறிவிக்காமலேயே வாரிசை அடையாளம் காட்டிய கருணாநிதியின் திறமை ஸ்டாலினின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம். மூத்த தலைவர்கள் ஒதுங்க, இளைய தலைமுறையினர் ஸ்டாலின் பின்னால் அணிதிரள, தலைவரின் தளபதியாக ஸ்டாலின் எழுச்சி பெற்றது கட்சிக்குள் பல திகைப்புகளையும் வியப்புகளையும் ஏற்படுத்திய திருப்பங்கள் கொண்ட நீண்ட கதை.

தலைவரின் மகன் என்பது ஸ்டாலினின் நுழைவுச் சீட்டு. அதாவது, அதிகாரத்தின் கோட்டைகளைத் திறக்கும் முத்திரை மோதிரம். இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அந்த மோதிரம் மட்டுமே ஸ்டாலினின் வளர்ச்சிக்குக் காரணம் இல்லை என்பதும் உண்மை. கிட்டத்தட்ட 35 ஆண்டுக் காலம் அவர் செலுத்திய கடுமையான உழைப்புக்கு இதில் இருக்கும் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. தி.மு..வில் எத்தனையோ பேச்சாளர்கள், பிரச்சார பீரங்கிகள் இருந்தாலும் இளைஞர் ஸ்டாலினின் சுற்றுப்பயணங்கள் கட்சிக்குள் ஏற்படுத்திய தாக்கம் தனித்துத் தெரிந்தது என்பதை மறுக்க முடியாது. தலைவரின் வாரிசு என்னும் அந்தஸ்து இங்கும் அவருக்குச் சாதகமாக நின்றது என்றாலும் கட்சியின் வாரிசு என்னும் மாலை தன்னைத் தேடி வரட்டும் என்று ஸ்டாலின் அமைதியாக உட்கார்ந்துவிடவில்லை. கருணாநிதிக்கு அடுத்தபடியாக தி.மு..வில் அதிகச் சுற்றுப்பயணங்கள் செய்த தலைவர்களில் முதலிடத்தில் அவர் இருக்கிறார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முந்தைய சில ஆண்டுகளில் அவரது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவை குறித்த பொது மனப் பதிவுகள் அனைத்தும் கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தன. ஆனால் நெருக்கடி நிலைக் காலத்து அனுபவங்களுக்குப் பிறகு நாம் பார்ப்பது வேறொரு ஸ்டாலினை.

நெருக்கடி நிலைக்கு முந்தைய அவதாரத்தை மறக்கடிக்குமளவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புணர்வுடனும் தீவிரமாகவும் செயல்பட்டுவரும் ஸ்டாலினின் பரிணாம வளர்ச்சி இயல்பான பல கட்டங்களைத் தாண்டியது. தீவிர அரசியலில் இறங்கிய பிறகு முதல் 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டிய நிலை. பல்வேறு தலைவர்களுக்கு மத்தியில் ஸ்டாலின் படிப்படியாக உழைத்துத் தன் நிலையை உயர்த்திக்கொண்டார். மக்களின் மனதில் தன்னைப் பற்றிய நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். நா.பார்த்தசாரதியின் புகழ்பெற்றகுறிஞ்சி மலர்நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரில் சொக்கத் தங்கமாகச் சித்தரிக்கப்பட்ட லட்சியவாத நாயகனின் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்தத் தொடர் பெரிதாக வரவேற்கப்படவில்லை என்றாலும் ஸ்டாலினின் படிமத்தை மாற்றுவதில் அதுவும் பங்காற்றியது.

வலுவான மாற்றம் பதவியோடு வந்தது என்று சொல்லலாம். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு நடந்த தேர்தலில் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட விதம் தொகுதியின் அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும் கவர்ந்தது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிந்தய அலையும் ஒன்றுபட்ட காங்கிரஸ் - .தி.மு..வின் வலுவான கூட்டணியும் சேர்ந்து தி.மு..வைப் படுதோல்வி அடையச் செய்ததில் ஸ்டாலினும் தோற்றுப்போனார். ஆனால் 1996-ல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் சென்னை நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராகவும் மேயராகவும் அவர் செயல்பட்ட விதம் அவருக்கு மேலும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது. 2001-ல் மீண்டும் அதி.மு.. ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதையடுத்து நடைபெற்ற மேயர் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆட்சியாளர் என்ற முறையில் அவர் பெற்ற நற்பெயருக்கும் தனிப்பட்ட முறையில் அவருக்கு  இருக்கும் செல்வாக்குக்கும் சான்றாக இந்த வெற்றி அமைந்தது. மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் அப்பதவியை அவர் ராஜினாமா செய்தார். 2006-ல் தி.மு.. மீண்டும் பதவியைப் பிடித்தபோது ஸ்டாலின் உள்துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் செயல்பட்டார். பதவி ஏற்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரது செயல்பாடுகள் பாராட்டு பெற்றன. சீரான நிர்வாகம், விரைவாக முடிவெடுத்தல், திட்டங்களை விரைந்து முடித்தல் எனப் பல்வேறு அம்சங்களில் அவரது செயல்பாடுகள் கவனிக்கவைத்தன. சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதில் அவரது பங்கு முக்கியமானது.

காலத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதில் ஸ்டாலின் கட்சியில் முன்னணியில் இருக்கிறார். தகவல் தொழில்நுட்பத்தை முதலில் வரித்துக்கொண்ட தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர் அவர். நிர்வாகத்தைக் கணினிமயமாக்கியதில் அவரது பங்கு கணிசமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே இருக்க வேண்டிய உறவு குறித்து அவருக்குத் தெளிவு இருப்பதாகவே கூறபடுகிறது. பல ஆண்டுகள் பெரிய பொறுப்புகளை வகித்தபோதும் பெரிய ஊழல் குற்றச்சாட்டு எதுவும் அவர் மீது இல்லை. வழக்குகளை நேரில் சந்திக்கும் பழக்கம் கொண்டவர் ஸ்டாலின். .தி.மு.. அரசு அவர் மீது தொடுத்த வழக்கில் அவருக்கு சம்மன்  அனுப்பப்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லாததால் காவல் துறை அவரைத்தேடஆரம்பித்தது. அதை அறிந்த அவர் தானாகவே டி.ஜி.பி. அலுவலகம் சென்று தன்னிடம் விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

கட்சித் தலைவராகவோ முதல்வராகவோ ஆவதற்கான தகுதியை ஏற்படுத்திக்கொள்வதில் ஸ்டாலின் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலரையும் அரவணைத்துச் செல்வதும் களத்தில் இறங்கிப் பணிபுரிவதும் இதற்கான காரணங்கள். அவர் சிறந்த பேச்சாளர் அல்ல. வசீகரமான ஆளுமை கொண்டவர் அல்ல. ஆனாலும் கட்சிக்குள்ளும் தி.மு..வின் விசுவாச வாக்காளர்கள் மத்தியிலும் பொதுமக்களிடத்திலும் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. அவர்தான் அடுத்த தலைவர், அவர்தான் முதல்வர் வேட்பாளர் எனத் தலைமை அறிவித்தால் கட்சியும் பொதுமக்களும் அதை வரவேற்பார்கள் என்பதே இன்றைய யதார்த்தம். 62 வயதானாலும் அவர் அடுத்த தலைமுறைத் தலைவராகப் பார்க்கப்படுவது அவருக்கான செல்வாக்கைக் காட்டுகிறது. அவருக்கான மாபெரும் சவால் கட்சிக்குள்ளிருந்து அல்ல, குடும்பத்துக்குள்ளிருந்தே எழுகிறது. 

எனினும் ஒரு தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் இன்னமும் வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு ஆற்றல் இருக்கிறது. மேடைப்பேச்சுக்குப் பேர்போன திராவிட இயக்கத்தின் சிறந்த பேச்சாளர்களுடன் ஸ்டாலினால் போட்டிபோட முடியாது. ஆனால் அவர் பேச்சு அலங்காரங்கள் தவிர்த்த இயல்பான பேச்சாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். அலங்காரச் சொல்லணிகளால் மக்களுக்குக் கிறக்கம் ஏற்படுத்திவந்த ஒரு பண்பாட்டுச் சூழலில் இயல்பாகப் பேசுவது முக்கியமான மாற்றம்தான். ஆனால் பேச்சுத் திறமை வெறும் அலங்காரத்தோடு தொடர்புடையது அல்ல. அது மக்களின் சிந்தனைகளையும் கனவுகளையும் கட்டமைக்கக்கூடிய நுட்பமான மொழிச் செயல்பாடு. இந்தத் திறமை ஒரு தலைவருக்கு அத்தியாவசியமானது. நெருக்கடியான சூழ்நிலைகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற, நிராசையான சூழ்நிலைகளில் நம்பிக்கையை ஏற்படுத்த, மொழியைக் கையாளும் விதம் மிகவும் முக்கியமானது. நெருக்கடியான சூழ்நிலையில் ஆற்றல் வாய்ந்த ஒரே ஒரு பேச்சு சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்தத் திறமை ஸ்டாலினுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும், ஸ்டாலினால் விவாதங்களை உருவாக்க முடியாது. சிந்தனை அரங்கில் சலனங்களை ஏற்படுத்தும் திறமையை இதுவரை அவர் வெளிப்படுத்தவில்லை. காந்தி, நேரு, பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி, .எம்.எஸ். நம்பூதிரிப்பாட், ஜெயப்பிரகாஷ் நாராயண், இந்திரா காந்தி, ஜோதிபாசு, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், கான்ஷிராம், வாஜ்பாய், அத்வானி எனப் பலரும் பொது வெளியில் சலனம் ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்களது சொற்கள் விவாதத்தைத் தூண்டும். அரசியல் நிரலைத் தீர்மானிக்கும். போக்குகளை உருவாக்கும். மாற்றும். மக்கள் இயக்கத்திற்குத் தலைமை தாங்குபவர்களின் மிக முக்கியமான பண்பு இது. ஸ்டாலினிடம் அது இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களிடமும் இல்லைதான். ஆனால், தங்களது வசீகரத்தினால் அவர்கள் இந்தக் குறையை ஈடுகட்டிவிடக்கூடியவர்கள். இவர்களைப் போன்ற வசீகரமும் ஸ்டாலினுக்கு இல்லை. ஒரு வலுவான தலைவராக உருவெடுப்பதில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய அம்சம் இது. 

நுட்பமான தளத்தில் நிலவும் இந்தப் போதாமைகளை விட்டுவிட்டுப் பார்த்தால், ஸ்டாலின் செயல்துடிப்புள்ள வலுவான தலைவராகவே தோற்றமளிக்கிறார். தி.மு..வின் மரபார்ந்த ஆதரவாளர்களுக்கு ஸ்டாலின் விஷயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கருணாநிதிக்குப் பதிலாக அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதைக் கட்சிக்கு எதிரான செயல்பாடாகவே அவர்கள் பார்க்கிறார்கள். கருணாநிதியின் வயதை முன்னிட்டு அவர் செயல்திறனைக் குறைத்து மதிப்பிடும் காரியமாகப் பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலான கட்சித் தொண்டர்களின் மனநிலையும் வாக்காளர்களின் மனநிலையும் ஸ்டாலினை நோக்கித் திரும்பியிருக்கிறது. குறிப்பாக, மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களால் மீண்டும் கருணாநிதி என்னும் நிலையை அவ்வளவு எளிதாக ஜீரணித்துக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம். இப்போதும் ஸ்டாலினுக்கு வாய்ப்பில்லை என்றால் பிறகு எப்போது என்னும் கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள். இந்தத் தேர்தலின் போக்குகள் இன்னமும் தெளிவாக உருப்பெறாத நிலையில் தி.மு.. ஸ்டாலினை முன்னிறுத்துவதன் மூலம் ஒரு படி முன்னால் நிற்க முடியும் என்பதே பலரது கணிப்பு. இந்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றனவே தவிர, அது தி.மு..வின் மீது இரட்டைத் தலைமையை வெளியிலிருந்து திணிக்கப் பார்க்கும் தந்திரம் அல்ல. அப்படி அது தந்திரம் என்றால் அதற்காக விதையைப் போட்டதும் தி.மு..தான் என்பதையும் மறந்துவிட முடியாது.

தேர்தல் பேச்சுக்கள் சூடுபிடிக்கத் தொடங்குவதற்கு முன்பே ஸ்டாலின் தமிழகம் முழுவதையும் சுற்றிவந்துவிட்டார். ‘நமக்கு நாமேஎன்னும் முழக்கத்துடன் வாக்காளர்களைச் சந்தித்துப் பேசினார். பெரிய பொதுக்கூட்டங்களை அதிகம் சாராமல், சின்னச் சின்னக் கூட்டங்களில் பேசினார். தொண்டர்களையும் மக்களையும் நேரடியாகச் சந்தித்துப் பேசி, அவர்களுடன் இயல்பாகப் புழங்கி, அவர்கள் மொழியில் உரையாடினார். தேர்தலுக்கான சூட்டைக் கிளப்பியதே ஸ்டாலின்தான். போகுமிடமெல்லாம் அவருக்குக் கிடைத்த வரவேற்பு மக்களின் மனநிலையைத் தெளிவாகவே அடையாளம் காட்டியது.   இந்த வரவேற்பு வெற்றிக்கான வாக்குகளாக மாறுமா என்பது வேறு விஷயம்.  ஆனால், ஆட்சி அமைக்க விரும்பும் ஒரு கட்சியின் முக்கியத் தலைவர் மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடுவது ஜனநாயக அமைப்பில் முக்கியமானது.

முதல்வர் வேட்பாளர் என்று கட்சி ஸ்டாலினை அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்குமா என்பதும் சந்தேகம்தான். ஆனால் அப்படி அறிவிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது என்று மக்களே சொல்லக்கூடிய அளவுக்கு ஸ்டாலின் தயாராகிவிட்டார். அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் தேர்தல் களத்தின் தன்மை மாறும் என்றே அரசியல் நோக்கர்கள் பலர் கருதுகிறார்கள். இன்றளவிலும் கருணாநிதி கட்சியின் கேள்விக்கப்பாற்பட்ட தலைவராக இருந்தாலும், கட்சியின் நாளைய முகம் மட்டுமல்ல, இன்றைய முகமும் ஸ்டாலின்தான்.

பல களம் கண்ட கருணாநிதிக்கு இவை அனைத்தும் தெரியும். துணை ஸ்டாலினை இந்த அளவுக்கு வளர அனுமதித்த அவருக்கு அதன் தர்க்கரீதியான நீட்சி என்னவென்பது தெரியாமல் இருக்காது. முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு அளித்த அவர், எனக்குப் பிறகு கட்சியை நடத்திச் செல்லும் தகுதி ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று பகிரங்கமாகப் பேசிய அவர், பதவி ஆசைக்காக ஸ்டாலினைப் புறக்கணிக்கிறார் என்று சொல்லிவிட முடியவில்லை. ஸ்டாலினை முதல்வராக அறிவித்தால் எங்கிருந்து எந்த வகையான எதிர்வினைகள் வரும் என்றும் அவருக்குத் தெரியும். காட்சி ஊடகங்களால் ஆளப்படும் இன்றைய யுகத்தில், எதிர்வினைகள் எப்படி ஊதிப் பெருக்கப்படும் என்பதும் அவருக்குத் தெரியும். மக்களின் பொதுப்புத்தியை ஊடகங்களே பெரிதும் கட்டமைக்கும் இன்றைய காலகட்டத்தில் அதிரடி முடிவுகளை எடுப்பது எளிதல்ல எனபதும் அவருக்குத் தெரிந்திருக்கும். அரசியலில் சாணக்கியராகவும் வித்தகராகவும் கருதப்படும் அவர் ஸ்டாலின் விஷயத்தில் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது. தன் காலம் முடியும்வரை தன்னைத் தவிர வேறு யாரையும் தலைமை / முதல்வர் பதவிக்கு முன்னிறுத்துவது குறித்துப் பேச்சே இல்லை என்றுகூட அவர் முடிவெடுக்கலாம். ஏற்கெனவே அத்தகைய முடிவை அவர் எடுத்தும் இருக்கலாம். பலரும் சொல்வதுபோல் பதவியின் மீது அவருக்கு இருக்கக்கூடிய ஈர்ப்பினாலும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்பினாலும் அவர் அந்த முடிவுக்கு வந்தால் ஸ்டாலினின் உழைப்பெல்லாம் மகன் தந்தைக்காற்றும் உதவியாகவே முடிந்துவிடும். ஆனால் அத்தகைய முடிவைக் கட்சி முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளுமா என்பது பெரிய கேள்விக்குறி.

குழப்பமான இந்தச் சூழலில் ஸ்டாலின் என்ன செய்வார்? கட்சியின் முக்கியத் தலைவர், கட்சியின் அடுத்த வாரிசாகக் கருதப்படுபவர் என்ற முறையில் அவர் தான் செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டார். கட்சி தேர்தலில் வெற்றிபெறுவதற்குத் தன் கடுமையான உழைப்பையும் அவர் செலுத்திவருகிறார். அடுத்த முதல்வர் என்ற பட்டத்தை நெடுங்காலமாகச் சுமந்துகொண்டிருக்கும் அவர் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. முதல்வர் நாற்காலிக் கனவு அவருக்கு இருக்கும் என்றால், அது குறித்த முடிவு அவர் கையில் இல்லை. காலம் கனியும்வரை காத்திருப்பது தவிர அவர் செய்வதற்கு ஏதும் இல்லை.  இன்று பொது வெளியில் அவருக்கான காலம் கனிந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கட்சிக்குள் அதற்கான அறிகுறிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகவே இருக்கின்றன. கட்சிக்குள் காலம் கனியும்போது வெளி உலகில் காலம் மாறியிருக்கலாம். அவர் நிலை இலவு காத்த கிளியின் கதி ஆகலாம். அவர் மாற்றத்துக்காகக் காத்திருக்கப்போகிறாரா அல்லது மாற்றத்தை நிகழ்த்தும் முனைப்பில் செயலாற்றப்போகிறாரா?

ஸ்டாலின் என்ன முடிவு எடுத்தாலும், அவர் முடிவு அவரது தலையெழுத்தை மட்டும் தீர்மானிக்கப்போவதில்லை என்பது உறுதி.

No comments:

Post a Comment